Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 10 மே 2013 (17:00 IST)
FILE
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என இயற்கை பகுப்பாய்வு மற்றும் மேகங்கள் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவாது,

மே மாதம் 10 ம்தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இராமநாதபுரத்தை மையமாக கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவின் ஓங்கோல், மச்சிலிப்பட்டிணம் உள்பட ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களிலும், ஒரிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே மாதம் 10 அல்லது 11 ம்தேதி முதல் 18 ம்தேதி வரை பலத்த மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி மே 13, 23 ஆகிய தேதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை நீக்க உங்களுக்கு அதிகாரமில்ல.. ராமதாஸ் அய்யா சொல்லட்டும்! - எம்.எல்.ஏ அருள் பதிலடி!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்குப்பதிவு.. பாஜக கண்டனம்..!

தமிழகத்தில் ஜூலை 8ஆம் தேதி வரை மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

பிளஸ் 1 மாணவனை மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

இது எங்க இடம் தான்.. ராணுவத்திற்கு சொந்தமான விமான ஓடுதளத்தை விற்ற தாய்-மகன்..!

Show comments