Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை கொள்முதல் 30% குறைந்தது

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (17:04 IST)
2010-11 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய உணவுக் கழகம் இதுவரை கொள்முதல் செய்துள்ள கோதுமையின் அளவு இந்த நிதியாண்டில் 30 விழுக்காடு குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 5.28 இலட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்தது இந்திய உணவுக் கழகம். இந்த ஆண்டில் 3.67 இலட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் விளைச்சல் இன்னமும் சந்தைக்கு வராததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக கோதுமை கொள்முதல் மார்ச் மூன்றாவது வாரத்தில் தொடங்கும். ஏப்ரல் முதல் கொள்முதல் அதிகரித்து ஜூன் மாதத்தில் முடிந்துவிடும். இன்று முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கோதுமை கொள்முதல் தொடங்குகிறது.

கடந்த நிதியாண்டில் 2.25 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்த மத்திய அரசு, இந்த நிதியாண்டில் 2.62 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments