கபினி அணையில் இருந்து 22,500 கன அடி நீர் வெளியேற்றம்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2011 (20:36 IST)
தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவிலும், கேரளத்திலும் தொடர்ந்து மழை பெய்த்ததால் கபினி அணைக்கு நீர் வரத்து கடுமையாக அதிகரித்தையடுத்து, அந்த அணையில் இருந்து 22,500 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.

இதனால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அருகே அழைத்துச் செல்லும் பரிசல் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி நொடிக்கு 30 ஆயிரம் கன அடி வரை நீர் வரத்து அதிகரித்தது. அருவிகள் பயங்கரமாக நீர் கொட்டியது.

கபினியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இன்று இரவு மேட்டூர் அணையை அடையும். மேட்டூர் அணைக்கு தற்போது நொடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

Show comments