Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க வேண்டும்: பாரதிய ஜனதா

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2011 (20:04 IST)
முந்திரி விவசாயிகளின் உடல் நலத்தை மிகவும் பாதித்த காரணத்திற்காக கேரள அரசால் தடை செய்யப்பட்ட எண்டோசல்ஃபான் எனும் பூச்சிக்கொல்லி இராசயணத்தை நாட்டளவில் தடை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எண்டோசல்்பானால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தேச அளவில் நிரூபித்தால் அதனை அரசு தடை செய்யும் என்று சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்த நிலையில், அதனை தடை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன், “எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துகிறோம ்” என்று கூறியுள்ளார்.

எண்டோசல்ஃபானுக்கு தேச அளவில் தடை விதிக்க வேண்டும் என்று கோரி அரசியல், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments