Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நவீன தொழில்நுட்பம் அவசியம்: வேளாண் விஞ்ஞானி

Webdunia
வெள்ளி, 20 மே 2011 (15:25 IST)
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் அதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியாக வேண்டும் என்று நாட்டின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானி கூறியுள்ளார்.

டெல்லியில் ஆசிய - பசிபிக் பகுதிக்கான வேளாண் உயிரிதொழில்நுட்ப ஒன்றிணைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வேளாண் ஆய்வு மற்றும் கல்வித் துறையின் முன்னாள் செயலராக இருந்த ஆர்.கே.பரோடா, “நமது நாட்டின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 23.5 கோடி டன் அளவிற்கு உள்ளது. இதனை 28.5 டன்களாக 2020ஆம் ஆண்டிற்குள் உயர்த்த வேண்டும். அதற்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தியாக வேண்டும ்” என்று கூறியுள்ளார்.

நமது நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 2 விழுக்காடாக உள்ளது, இதனை 4 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் பரோடா கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments