Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக குளிர் நிலை கோதுமை மகசூலைப் பெருக்கும்: வேளாண் நிபுணர்

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2011 (13:14 IST)
வட இந்தியாவில் தற்பொழுது நிலவும் மிக அதிகமான குளிர் கோதுமை சாகுபடிக்கு உகந்தது என்றும், அது அதிக மகசூலைப் பெருக்கும் என்று பஞ்சாப் வேளாண் பல்கலை பேராசிரியர் கூறியுள்ளார்.

பொதுமான குளிர் காலமும், அந்த நேரத்தில் பொழியும் பனியும் பயிர்களை கருகச் செய்துவிடும் என்றும், உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என்றே கூறப்பட்டது. ஆனால் பஞ்சாப் வேளாண் பல்கலையின் கோதுமை பிரிவு தலைமை பேராசிரியரான இந்து சர்மா, தற்போது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் கோதுமை பயிர் நன்கு முளை விட உதவும் என்றும், இதனால் மகசூல் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

“இப்போது நிலவும் குளிர் கோதுமைக்கு பயிருக்கு மிகவும் சாதகமானதாகும். இதனால் கோதுமை செடியில் அதிகமான குருத்துகள் தோன்றும், அது இறுதியில் மகசூலை பெருக்கும ்” என்று இந்து சர்மா கூறியுள்ளார்.
ஒரே கோதுமை செடியில் பல குருத்துகள் தோன்றி வளரும், இதனால் செடி பரவி வளரும், வயல் முழுவதும் பயிராக காணப்படும். இதனால் அதிக மகசூல் கிடைக்கும் என்று சர்மா கூறியுள்ளார்.

அதிக மகசூல் மட்டுமின்றி, கடுமையான குளிரால் கோதுமைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் இல்லாமல் போகும் என்பது ஒரு சாதகமான நிலை என்றும் சர்மா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments