இடைத்தேர்தல் நிறைவு; இறுதி நிலவரம் - அரவக்குறிச்சியில் 81.92 சதவீத ஓட்டுப்பதிவு

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (17:54 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு  நடைபெற்றது.


 


 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. துவக்கம் முதலே அரவக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. 
 
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 81.92 சதவீதம் பதிவாகியுள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இறுதி நிலவரப்படி,

அரவக்குறிச்சி - 81.92
 
தஞ்சாவூர் -69.02
 
திருப்பரங்குன்றம் -70.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
 
அதேபோல், பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில், நெல்லித்தோப்பு பகுதியில் 85.76 சதவீதம் ஓட்டுப் பதிவு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments