Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் பாலிலும் கலப்படம். அமைச்சர் ராஜேந்திர பாலஜி அதிரடி

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (05:01 IST)
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாகவே தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனங்கள் கலந்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் நெஸ்லே டுடே, ரிலையன்ஸ் பால் பவுடரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற நிறுவனங்களின் பால்களை வாங்குவதன் மூலம் பொதுமக்கள் விலை கொடுத்து நோயை வாங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



 


மேலும் ஆவில் பால் மற்றும் தயிரில் எந்தவித ரசாயன கலப்படமும் இல்லை என்று அவர் உறுதி கூறியுள்ளார். இதுநாள் வரை எந்த நிறுவனத்தின் பாலில் கலப்படம் இருக்கிறது என்பதை கூறாமல் பொதுவாக தனியார் பாலில் கலப்படம் என்று கூறி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது நிறுவனங்களின் பெயர்களையும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பால் பவுடரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறிய அமைச்சர், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறி நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments