Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு வரை தொடர்ந்த விசாரணை. தினகரன் வழக்கறிஞர் திடீரென வந்ததால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (04:50 IST)
ஒருங்கிணைந்த அதிமுக சின்னமான இரட்டை இலையை பெறுவதற்காக ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிற்காக கடந்த மூன்று நாட்களாக டெல்லி போலீசார் டிடிவி தினகரனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.  நேற்று நள்ளிரவு வரை இந்த விசாரணை நடந்தது.



 


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென தினகரன் வழக்கறிஞர் குமார் விசாரணை நடந்து கொண்டிருக்கும் டெல்லி குற்றப்புலனாய்வு பிரிவு காவல்நிலையத்திற்கு வந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரனை கைது செய்ய டெல்லி போலீசார் ஒருவேளை திட்டமிட்டிருந்தால் அதற்காக முன் ஜாமீன் பெறுவது குறித்த ஆலோசிக்க வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக இன்றுடன் விசாரணை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

என் மனைவியை பார்த்து கொண்டே இருப்பது பிடிக்கும்.. 90 மணி நேரம் வேலை குறித்து ஆனந்த் மகேந்திரா..

இன்று முதல் மீண்டும் மழை ஆரம்பம்.. 5 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கூறியதா? போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்.. போராடும் மக்களை நேரில் சந்திக்கிறார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments