Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போடும் ஒவ்வொருவருக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஜிகே மணி

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (06:07 IST)
ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றபோது எதிர்த்தவர்கள் பலர், கமல் அரசியலுக்கு வரப்போகிறார் என்றவுடன் அவருக்கு ஆதரவு அளிப்பது பெரும் ஆச்சரியத்டை தந்து கொண்டிருக்கின்றது.



 
 
ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றவுடன் அவர் கன்னடர் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்த்த 'நாம் தமிழர்' கட்சியின் சீமான், கமல் குறித்து இன்னும் கருத்து சொல்லாமல் இருக்கின்றார்.
 
அதேபோல் ரஜினியுடன் பல வருடங்களாக மோதல் போக்கை கடைபிடிக்கும் கட்சி பாமக. இந்த கட்சி கமலுக்கு தற்போது ஆதரவு கொடுத்துள்ளது. இக்கட்சியின் தலைவர் ஜிகே மணி சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'தமிழகத்தில் வாக்களித்த, வாக்களிக்கும் உரிமையுள்ள யாரும் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்கலாம். தவறுகளை சுட்டிக் காட்டலாம். அதற்கு, மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த வகையில், கமல் இந்த ஆட்சியை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை. அதற்கு, நாகரீகமாக இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் பதில் அளிப்பதை விட்டுவிட்டு, கமலிடம் மிரட்டலாக, நாகரீகம் அற்ற வார்த்தைகளில் பேசுவது தவறு. கமலை அப்படி பேசத்தான் அமைச்சர்களுக்கு உரிமையில்லை" என்று கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments