Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுச்செயலாளர் பதவியே போதும் : இறங்கி வரும் ஓ.பி.எஸ் அணி?

Webdunia
வியாழன், 11 மே 2017 (11:16 IST)
எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவதற்காக, தங்களின் முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை தளர்த்திக் கொள்ளும் முடிவிற்கு ஓ.பி.எஸ் அணி வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. இதில், சசிகலாவும், தினகரனும் தற்போது சிறையில் இருக்கிறார்கள். 
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணையும் சூழல் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை, சசிகலா குடும்பத்தினைரை கட்சியிலிருந்து நீக்குதல் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, இதுவெல்லாம் முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது. எனவே, இரு அணியும் இணைவது சாத்தியமில்லாத சூழலாகவே பார்க்கப்பட்டது. 
 
எனவே, ஓ.பி.எஸ் ஒரு பக்கம் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால், தற்போது ஓ.பி.எஸ் அணியினர் மீதான செல்வாக்கு மக்களிடையே படிப்படியாக குறைந்து வருவதால், தங்கள் முக்கிய கோரிக்கைகளை விட்டுத்தர ஓ.பி.எஸ் அணி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


 

 
அதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் எடப்பாடி அணியினருடன் இணைவதே நல்லது. எனவே, முதல்வர் பதவி வேண்டாம். பொதுச்செயலாளர் பதவியே போதும் என்ற முடிவிற்கு ஓ.பி.எஸ் வந்து விட்டார் எனக்கூறப்படுகிறது. மேலும், மாவட்ட, ஒன்றிய அளவிலுள்ள கட்சி பொறுப்புகளில் சிலவற்றை கேட்டுப்பெறுவோம் என ஓ.பி.எஸ் அணி முடிவெடுத்துள்ளதாம்.
ஓ.பி.எஸ் அணி இறங்கி வர முடிவெடுத்திருப்பதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments