Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா கருணாநிதி?

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (11:35 IST)
திமுக தலைவர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிய விவகாரம் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி வீடு திரும்பினார். அதன்பின் அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
 
திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்க நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் அவரை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், கருணாநிதி இன்னும் 15 நாட்களில் மக்கள் பணியாற்ற வருவார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 25ம் தேதி கூறினார்.
 
இந்நிலையில், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் கூறினார். அத்துடன் கிளாடியேட்டர் படத்தில் அரச பதவிக்காக, மகனே தந்தையை கொலை செய்யும் காட்சியையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
 
இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments