தீபாவின் புதிய கட்சிக்கு பெயர் என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (14:21 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அதிமுகவில் ஒருசிலரை தவிர பெரும்பாலோனோர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தலைமையேற்குமாறும் கூறிவருகின்றனர். தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்த தொண்டர்கள், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


 

இந்நிலையில் கடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசத்தை தீபா உறுதி செய்தார். கட்சி குறித்த மற்ற விபரங்களை ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று வெளியிடுவதாக அறிவித்தார்.

இது குறித்து தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் பலர் சசிகலா மீது அதிருப்தியில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்கவேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்துவருகின்றனர். இதையடுத்து அரசியலில் இறங்க முடிவெடுத்துள்ள தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி புதிய கட்சி குறித்த விபரங்களை வெளியிடுவார்.புதிதாக துவங்க உள்ள இந்த கட்சிக்கு  இந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவுடன் பேச்சுவார்த்தை?.. காய் நகர்த்தும் சசிகலா!.. விஜய் சம்மதிப்பாரா?...

விஜய்யை நம்பி நாட்டை ஒப்படைத்தால் குத்தாட்டம் தான் போடுவார்.. திட்டங்கள் எதுவும் நடக்காது.. திண்டுக்கல் லியோனி

அஜித்குமார் கொலை வழக்கு!.. போலீஸுக்கு பாடம் புகட்டுவோம்!.. உயர்நீதிமன்றம் காட்டம்!...

விஜய்க்கு எந்த கட்சி யாருடன் கூட்டணியில் உள்ளது என்று கூட தெரியாது: ஈபிஎஸ் கலாய்ப்பு..!

3 சிலிண்டர்கள் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. தொழில் தொடங்க வட்டியில்லா கடன்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments