Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்திற்கு அதிர்ச்சி ஆகாத அமைச்சர் இளையராஜாவுக்கு மட்டும் அதிர்ச்சி அடைவது ஏன்?

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (23:20 IST)
கடந்த ஒருவாரமாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.



 


இந்நிலையில் இளையராஜா -எஸ்பிபி குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'இந்த பிரச்சனை குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவது குறித்த பிரச்சனையை இருவரும் பேசி நல்ல விதமாக சரிசெய்ய வேண்டும் என்றும் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடுவின் இந்த கருத்துக்கு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் சமூக இணையதள பயனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  டெல்லியில் ஏழு நாட்களாக விவசாயிகள் குளிரிலும், வெய்யிலிலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதுகுறித்து இதுவரை வாய்திறக்காத வெங்கையா நாயுடு, இளையராஜா சர்ச்சை குறித்து மட்டும் கருத்து தெரிவித்து இருப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி மேல் கேட்டு வருவதால் அமைச்சர் தரப்பு தர்மசங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments