Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தியின் ஜப்பான் இசை வெளியீட்டுக்கு ஏன் செல்லவில்லை… இயக்குனர் அமீர் அளித்த பதில்!

கார்த்தியின் ஜப்பான் இசை வெளியீட்டுக்கு ஏன் செல்லவில்லை… இயக்குனர் அமீர் அளித்த பதில்!
, செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:56 IST)
ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தினர். இதில் கார்த்தியை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆனால் கார்த்தியின் முதல் படத்தை இயக்கி அவரின் நடிப்பு வாழ்க்கைக்கு அச்சாரமாக விளங்கிய இயக்குனர் அமீர் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பருத்திவீரன் ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது இதுவரை சமாதானமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது மாயவலை என்ற படத்தில் நடித்துள்ள அமீர், அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது அவரிடம் ‘ஏன் ஜப்பான் இசை வெளியீட்டுக்கு செல்லவில்லை. அவர்கள் உங்களை அழைத்ததாக சொல்கிறார்களே?’ எனப் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமீர் “என்னை யாரும் அழைக்க இல்லை. அதனால் நான் போகவில்லை. என்னை அழைத்தேன் என்று சொன்னவர்களை என்னிடம் நேரில் வந்து சொல்ல சொல்லுங்கள். அவர்கள் அழைத்ததாக சொன்னதையே இப்போது உங்கள் மூலம்தான் தெரிந்து கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை 2 படத்தின் ரிலீஸில் மேலும் தாமதமாக வாய்ப்பு!