Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக் காதலனுடன் பேசி ...கணவனை கொல்ல முயன்ற மனைவி...

கள்ளக் காதலனுடன் பேசி ...கணவனை கொல்ல முயன்ற மனைவி...
, வியாழன், 29 நவம்பர் 2018 (18:33 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பக்கிரிப் பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் சபீனா (34) கடந்த 2005 ஆம் ஆண்டில் இவருக்கும் ஜாகிருக்கும் (46)திருமணம் நடந்தது.பின் வேலைக்காக ஜாகிர் வெளிநாடு சென்றார்.
பிறாகு தான் தனியாக இருப்பதாக உணர்ந்து தன் சகோதரரியின் மகளை அழைத்து வந்து தனக்கு துணையாக தன் வீட்டில் தங்க வைத்தார். 
 
இந்நிலையில் பக்கத்து  வீட்டிலிருந்த யுவராஜ் ( 27 ) என்பவருடன் சபீனாவுக்கு பழக்கம் ஏறபட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர்.
 
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து கணவன் வீட்டுக்கு வந்தும் கூட சமீனா -யுவராஜின் லீலைகள் செல்போனில் பேச்சுகள் தொடர்ந்தபடியே இருந்தன.
 
இந்நிலையில் ஒருகட்டத்திக்ல் கோபமான ஜாபர் மனைவியை யாரிடம் பேசுகிறாய் என கேட்டுள்ளார். உடனே ஆத்திரமடைந்த சபீனா வீட்டில் இருந்த மண்ணெணெய் எடுத்து ஜாபர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். ஜாபரின் அலரல் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டார் உடனே ஓடிவந்து தீயை அணைத்துவிட்டனர்.
 
பிறகு தீக்காயம் ஏற்பட்ட ஜாபரரை மீட்டு  அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஜாபர் ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீஸார்  அவரிடம் வாக்குமூலம் பெற்றனர் அதில் தன் மனைவிதான் தன்னைக் கொல்ல பொட்ரோல் ஊற்றீ தீவைத்தது என கூற .. போலீஸார் உடனடியாக சபீனா மற்றும் அவரது கள்ளக் காதலன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்  பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்தக் கொலை சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் விவகாரம்: மக்களை ஏமாற்றும் அரசு: டிடிவி தினகரன் காட்டம்!