Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியின் படத்தையே மார்ஃபிங் செய்த கணவன் : மனைவி போலீஸில் புகார்

மனைவியின் படத்தையே மார்ஃபிங் செய்த கணவன் : மனைவி  போலீஸில் புகார்
, வியாழன், 29 நவம்பர் 2018 (17:06 IST)
புனேவில் வசிக்கும் ஒரு  கடற்படை வீரர் மார்பிலிங் செய்யப்பட்ட தன் மனைவியின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். 
இதை பார்த்து அதிர்ந்து போன அவரது மனைவி கடந்த செவ்வாய் கிழமை அன்று டெல்லியில் உள்ள கோந்த்வா பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கும் தன் கணவன் மீது புகார் கொடுத்துள்ளார்.
 
அதில் தான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் எனவும்,  நானும் குழந்தைகளும்  கணவருடன் ஒன்றாக புனேவில் வசித்த போது அவரது இந்த ஆபாச புகைப்படம் பார்க்கும் பழக்கத்தை விட்டு விடுமாறு எவ்வளவோ சொல்லியும் , உறவினர்கள் சொல்லியும் அவர் அதை விட மறுத்துவிட்டார். 
 
இதனால் வெறுத்துபோய் என் கணவரை விட்டு பிரிந்து நானும் எனது குழந்தைகளும் டெல்லியில் வசித்து வரும்கிறோம். 
 
நான் கணவிரிடம் விவாகரத்து பெறுவதற்காக வீட்டிலிருந்து கிளம்பும் முன் என் கணவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தேன்.அதில்  தான் இந்த மாதிரியான் என்னைப் பற்றிய ஆபாசமாக என படங்கள் ஒரு அப்பிளிகேசனில் இருந்ததாக புகார் அளித்ததாக காவல் ஆய்வாளர் கும்பார் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கடற்படை வீரர் எற்கனெவே இவர் மனைவிபோல பல பெண்களின் புகைப்பங்களை அந்த செயலியில் பதிவிட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
 
இந்த விவகாரத்தில் வீரரின்  மனைவியை தவிர வேறூ யாரும் அவர் மீது புகார் தெரிவிக்கவில்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இந்த ஆபாச புகைப்பட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனியா காந்தி சென்னை வரும் தேதி அறிவிப்பு