சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் மீண்டும் சிக்கல்! ராக்கெட் பழுது..!

Prasanth Karthick
வியாழன், 13 மார்ச் 2025 (08:32 IST)

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள நிலையில் அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

 

இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீரராக செயல்பட்டு பலமுறை விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றனர். 

 

ஆனால் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக கடந்த 9 மாதங்களாக விண்வெளி ஆய்வு மையத்திலேயே இருந்து வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப், சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்தார்.

 

அதன்படி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், நாசா இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 10 என்ற மீட்பு விண்கலத்தை அனுப்பி சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோரை மீட்க துரித நடவடிக்கை எடுத்தனர். இன்று இந்த ராக்கெட் புறப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்து சேர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments