பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

Siva
புதன், 21 மே 2025 (07:45 IST)
இந்தியாவிற்கு பிறகு, இப்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் நீர்வரத்தை குறைக்க அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஜெனரல் முபின், பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை தடுத்து வைக்க, காபூல் அரசுக்கு அணைகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்று மீர் யாப் பாலூச் தகவல் வெளியிட்டுள்ளார்.
 
காபூல் நதியின் துணைநதியாகிய குனார் நதி, ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. இது பாகிஸ்தானுக்கு முக்கியமான நீர்வழியாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு புதிய சங்கடம் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
 
ஏற்கனவே சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்துள்ள நிலையில் புதிய அணைகள் கட்டவும் திட்டமிட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் பாதிப்பதோடு பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது ஆப்கானிஸ்தான் நாடு புதிய அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதால் பாகிஸ்தான் விரைவில் பாலைவனமாக மாறும் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments