காரச்சாரமான கருணைக்கிழங்கு மசியல் செய்வது எப்படி?

கருணைக்கிழங்கு கிழங்கு வகைகளில் அரிப்புத்தன்மை கொண்டதும், சுவையானதும் ஆகும். கருணைக்கிழங்கை கொண்டு சுவையான மசியல் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: கருணைக்கிழங்கு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எண்ணெய், கொத்தமலி தழை, உப்பு

தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி

கருணைக்கிழங்கை கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

வெந்த பிறகு கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் மசித்த கருணைக்கிழங்கு, தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சூப்பரான கருணை மசியல் தயார்.

ஆட்டு ரத்தப் பொறியல் சுவையாக செய்வது எப்படி?

Follow Us on :-