வெயிலை தணிக்கும் நெல்லிக்காய் ஜூஸில் இவ்வளவு பயன்களா?

உடலுக்கு நலம் பல தரும் ஜூஸ்களில் நெல்லிக்காய் ஜூஸும் ஒன்று. எனினும் நெல்லிக்காய் சாறை தட்பவெட்ப நிலை அறிந்து பருகுவது நல்லது. நெல்லிக்காய் சாறு எப்போது அருந்தலாம் என பார்ப்போம்.

Various Source

நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. இதில் விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

வெயில் காலத்தில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தாகம், உடல் சூடு தணிகிறது.

நெல்லிக்காய் சாறில் உள்ள துவர்ப்பு தன்மை தொடர்ந்து உமிழ்நீர் சுரக்க செய்வதால் செரிமானம் எளிதாகிறது.

வெயிலில் அலைவதால் ஏற்படும் சோர்வு, ரத்த அழுத்த மாற்றத்தை நெல்லிக்காய் சாறு சமன் செய்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிப்பதால் சீசன் வியாதிகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

கோடைக்காலங்களில் ஏற்படும் வேர்குறு, பருக்கள் குறைய நெல்லிக்காய் சாறு நல்ல மருந்து

உடல் முழுவதும் வியர்த்திருக்கும்போது நெல்லிக்காய் சாறு பருகாமல் சற்று ஓய்வெடுத்து பின்னர் பருகலாம்.

ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ரஸ்க் அல்வா செய்வது எப்படி?

Follow Us on :-