அந்த இடத்துல கைய விட்டான்? ஆண்ட்ரியா சொன்ன அந்த சம்பவம்!
பிரபல நடிகை ஆண்ட்ரியா தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்
Instagram
தமிழில் பிரபல நடிகையாகவும், பிண்ணனி பாடகியாகவும் உள்ளவர் ஆண்ட்ரியா ஜெரேமியா.
ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆண்ட்ரியா தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் சிறிய நகரத்தில் இருந்து சென்னை வரும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசுகிறது.
இந்த படம் பற்றி பேசியபோது தனக்கு சிறு வயதில் நிகழ்ந்த கசப்பான சில அனுபவங்கள் குறித்தும் ஆண்ட்ரியா மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் “நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது குடும்பத்துடன் பேருந்தில் வேளாங்கண்ணி சென்றேன். அப்போது என் தோள் மேல் ஒருவன் கை வைத்தான்..”
Instagram
“முதலில் நான் என் தந்தையின் கை என நினைத்தேன். ஆனால் அந்த கை என் ஆடைக்குள் நுழையவும் அது என் தந்தையின் கை இல்லை வேறு ஒருவனது கை என்பதை உணர்ந்தேன்..”
Instagram
“ஆனால் இதுபற்றி என் பெற்றோரிடம் கூற பயந்து முன்னால் சென்று அமர்ந்தேன். பலரும் இப்படிதான் தங்களுக்கு நேரும் அவலம் குறித்து வெளிப்படையாக பேச முடியாமல் உள்ளனர்..”
Instagram
“.. இதுபோன்ற விஷயமெல்லாம் நடந்தால் நாம் வெளியே சொல்லக்கூடாது என்றுதான் நம்முடைய சமூகம் நம்மை வளர்த்து இருக்கிறது” என்று பேசியுள்ளார்.