டிக்ளேர் செய்த இந்தியா.. 5 விக்கெட்டை இழந்து தோல்வியின் விளிம்பில் மே.இ.தீவுகள்.. இன்னிங்ஸ் வெற்றியா?

Mahendran
சனி, 4 அக்டோபர் 2025 (11:34 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டிக்ளேர் செய்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் மட்டுமே எடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதில் கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ஜடேஜா ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.
 
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. அந்த அணி வெறும் 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்னும் 220 ரன்கள் பின்தங்கியுள்ளது.
 
இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளை இந்திய அணி விரைந்து வீழ்த்திவிட்டால், இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments