ஆஸ்திரேலிய அணியை பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 8 சிக்ஸர்களுடன் மின்னல் வேக சதம்!

Siva
புதன், 1 அக்டோபர் 2025 (12:30 IST)
இந்திய கிரிக்கெட்டின் இளைய நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி,  ஆஸ்திரேலிய அண்டர்-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் வெறும் 78 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
 
பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில், வைபவ் 86 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்தார். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் வரலாற்றில், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லத்துக்குப் பிறகு, 100 பந்துகளுக்குள் இரண்டு சதங்களை பதிவு செய்த ஒரே வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார்.
 
இதற்கு முன், அவர் கடந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் அடித்தார். இந்த இடது கை ஆட்டக்காரரான இவர் ஒருநாள் கிரிக்கெட்  வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார்.
 
முன்னாள் இந்திய அண்டர்-19 கேப்டன் உன்முக்த் சந்த் 21 போட்டிகளில் அடித்த 38 சிக்ஸர்கள் என்ற நீண்ட கால சாதனையை, வைபவ் சூர்யவன்ஷி 10 போட்டிகளில் 41 சிக்ஸர்கள் அடித்து முறியடித்துள்ளார்.
 
இந்தப் போட்டியில், இந்தியாவின் வேதந்த் திரிவேதியும் 192 பந்துகளில் 140 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments