அவதார புருஷனாக விஜய் தன்னை நினைச்சுக்குறார்! - ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

Prasanth K
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (10:01 IST)

நேற்று நடந்த மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. சுமார் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்த மாநாடு 2 மணி நேரங்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டது. அதனால் விஜய் வழக்கம்போல பிற கட்சிகளை விமர்சித்து பேசிவிட்டு நகர்ந்தார். ஆனால் மதுரை மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் அடையாளங்களை விஜய் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் விதத்தில் செயல்பட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனாக விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். அண்ணாவையும், எம்ஜிஆரையும் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்வது சாத்தியமில்லை என்பதால் அவர்களை குறிப்பிட்டு இணைத்து பேசுகிறார். ஆனால் விஜய்யின் அரசியல் ஆசான் யார் என்பதுதான் தெரியவில்லை” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments