சென்னையின் பல பகுதிகளில் திடீர் மழை.. இன்று இரவு எங்கெல்லாம் மழை பெய்யும்?

Mahendran
புதன், 10 செப்டம்பர் 2025 (17:07 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளான சென்ட்ரல், பாரிஸ், மெரினா, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர், சேப்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று திடீரென மிதமான மழை பெய்தது. 
 
இந்த எதிர்பாராத மழை, வெப்பத்தில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று இரவு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments