திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் – டிடிவி!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (11:05 IST)
திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் அந்த கட்டி மாட்டி கொள்ளும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக வரம்புமீறி ஆட்சி செயல்படும்போது மூக்கணாங்கயிறு போல செயல்படுவதற்கு ஆளுநர் கண்டிப்பாக தேவைதான் என்றும் அவர் ஆளுநர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் திமுக தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை வெளியான நிலையில் அதில் பரபரப்பு தகவல்கள் இருந்ததையடுத்து டிடிவி தினகரன் இந்த கருத்தை கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவர் மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர். திமுகவை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் என  கூறியுள்ளார்.
 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments