எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

Siva
வியாழன், 4 செப்டம்பர் 2025 (13:13 IST)
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி தான் சொல்லாத விஷயங்கள் பரப்பப்படுவதாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாகச் செய்திகள் பரவுகின்றன. அது தவறானது, அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது" என்று அவர் கூறியுள்ளார்.
 
தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. இடையே ஏற்பட்ட கூட்டணி முறிந்துவிட்டதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.  இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு சில செய்திகள் பரவின. அது தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
 
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிரேமலதா விஜயகாந்த் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments