பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (19:45 IST)
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழத்தில் கடந்த 13 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி  நிறைவடைகிறது. அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் 14 ஆம் தேதி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த  நிலையில், தமிழகம் முழுவதும்  பிளஸ் 2 தேர்வை 8,51,303 மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவோர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று  பள்ளிக்கல்வித்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், பிளஸ் 2 விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments