ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் உண்மையிலேயே போட்டியிடுகிறாரா? கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட்?

Siva
வெள்ளி, 22 மார்ச் 2024 (08:07 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியான நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ஓபிஎஸ் அணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் அவருடைய மகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அவர் ஒரு அமைப்பை நடத்திவரும் நிலையில் ஓபிஎஸ், பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறிவிட்ட நிலையில் அவர் சுயேட்சையாக தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென ஓபிஎஸ் அணிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி நேரத்தில் திடீரென பிரதமர் மோடி அங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது ஓபிஎஸ் தனது தொகுதியை விட்டுக் கொடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது நடந்தால் இந்த தேர்தல் பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments