இனி மழையே கிடையாது? கொளுத்த வருகிறது அக்னி நட்சத்திரம்..! - வெப்பம் எப்படி இருக்கும்?

Prasanth Karthick
திங்கள், 28 ஏப்ரல் 2025 (08:59 IST)

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் வெப்பத்தின் உச்சக்கட்ட காலமான அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் மார்ச் இடைக்காலம்  முதலாகவே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியிருந்தாலும் இடையே பல பகுதிகளில் நல்ல மழை பெய்து பூமியை குளிர்வித்து வந்தது. தற்போதும் நேற்று முதலாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. 

 

கோடைக்காலத்தில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் காலமானது உச்ச வெப்பநிலையை அளிக்கும் காலமாக உள்ளது. இதை கத்திரி வெயில் என்றும் கூறுவர். இந்த நாட்களில் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆண்டு கத்தரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழையும் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வெப்பநிலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments