எதுக்கு நீங்கலாம்... திமுக தோழமை கட்சிகளை விளாசிய கே.என்.நேரு!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (12:17 IST)
ஆளும்கட்சிகள் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிப்பதை தோழமை கட்சிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என கே.என்.நேரு பேசியுள்ளார். 
 
திமுக சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் நேரு பங்கேற்றார். அப்போது அவர் நிகழ்வில் பேசியது பின்வருமாறு, திமுக தலைவர் ஸ்டாலின் உள்றுகிறார் என விமர்சிக்கிறார்கள். டாக்டர் பட்டம் பெற்ற நீங்கள் சரியாக பேசுகிறீர்களா? கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்கிறீர்கள். 
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பிரதமர் யார் என்றே தெரியவில்லை. மன்மோகன் சிங் என்கிறார். தலைவர்கள் பேசும்போது ஓரிரு வார்த்தைகள் தவறுவது இயல்புதான். அதேபோல தலைவர் குறிப்பிஎடுத்து பேசுவதாக விமர்சிக்கிறார்கள். முதல்வர் உட்பட அமைச்சர்கள் பேப்பர் பார்த்துதான் பக்கம் பக்கமாக வாசிக்கிறார்கள்.
 
இவை அனைத்தையும் தாண்டி ஸ்டாலினை ஆளும்கட்சியினர் விமர்சிக்கும் போது தோழமை கட்சிகள் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது வருத்தத்தை அளிக்கிறது என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments