அமித்ஷாவை சந்திக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. 30 தொகுதிகள் கேட்க திட்டம் என தகவல்..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (15:08 IST)
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்குத்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் உள்ளது என உரிமை கொண்டாடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு அடுத்த சில நாட்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும்  திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுடனும் பாமக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த கூட்டணியில் இணைந்தாலும், பாமகவுக்கு 30 தொகுதிகள் கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ராமதாஸின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள், தமிழக அரசியலில் பாமகவின் எதிர்கால நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments