அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
ஞாயிறு, 14 செப்டம்பர் 2025 (15:21 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால் கனமழை 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 16ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

 

செப்டம்பர் 17ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

செப்டம்பர் 18ம் தேதி திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments