முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவபழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Siva
செவ்வாய், 6 மே 2025 (14:02 IST)
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அக்னி நட்சத்திர வெயில் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கும் நிலையில், வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.
 
 அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் மே இறுதி வாரத்தில் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, அதன் பிறகு அடுத்தடுத்த வாரங்களில் இந்தியாவிலும் மழை பெய்யும்.
 
ஆனால் இந்த முறை, தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, இரண்டு வாரங்கள் முன் கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments