ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

Siva
செவ்வாய், 9 டிசம்பர் 2025 (18:15 IST)
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி, தி.மு.க. அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் இன்று மக்களவை சபாநாயகரிடம் தீர்மான நோட்டீஸ் வழங்கினர். 
 
நீதிபதி சுவாமிநாதன் அளித்த திருப்பரங்குன்றம் மலை தீபம் குறித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
தி.மு.க.வின் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர். ஒரு நீதிபதியைப் பதவி நீக்க, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. 
 
ஆனால், 'இந்தியா' கூட்டணிக்கு அந்த பலம் இல்லை என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்புள்ளது. பலம் இல்லை என்று தெரிந்தும் தீர்மானம் இயற்றி இருப்பது  வெறும் அரசியல் நாடகமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments