ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Mahendran
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (10:01 IST)
சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் பகுதிக்கு அருகில் கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 24 மணி நேரமாக கடலோர சென்னைக்கு அருகில் நிலைத்திருந்த 'டெத்வா' புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. இது அடுத்த 18 மணி நேரமும் சென்னை கடற்கரைக்கு அருகிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முழுவதும் இடைவிடாமல் மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மாலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது, இரவு முழுவதும் மழை நீடிப்பதோடு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில இடங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments