சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு: 17 பேர் மீது வழக்குப் பதிவு

Mahendran
சனி, 15 நவம்பர் 2025 (13:47 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்கலைக்கழக அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில், பல்கலைக்கழகத்தின் அங்கீகார மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள் மற்றும் சில கல்லூரி நிர்வாகிகளும் அடங்குவர். 2023-24 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் இயங்கி வந்த 480 பொறியியல் கல்லூரிகளில், 224 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் இந்த சட்டவிரோத செயல்கள் நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
பொறியியல் கல்வியின் தரத்தை பாதிக்கும் இந்த மோசடி குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. பல்கலைக்கழக அளவில் நடந்த இந்த முறைகேடுகள், தமிழகத்தின் உயர்கல்வித் தரத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments