Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று தொடங்குகிறது 45வது புத்தக கண்காட்சி: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

இன்று தொடங்குகிறது 45வது புத்தக கண்காட்சி: சென்னை மக்கள் மகிழ்ச்சி!
, புதன், 16 பிப்ரவரி 2022 (07:30 IST)
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் புத்தக கண்காட்சி காலதாமதமானது
 
இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்க இருப்பதாக பபாசி அறிவித்துள்ளது. இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புத்தகக் காட்சியை தொடங்கி வைப்பதாக பபாசி அறிவித்துள்ளது
 
45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்குகிறது என்றும் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் பபாசி அறிவித்துள்ளது
 
ஏற்கனவே புத்தக கண்காட்சிக்கு இ-டிக்கெட் ஆன்லைனில் விற்கப்பட்டு வரும் நிலையில் நேரில் வருபவர்களுக்கும் டிக்கெட் வழங்கப்படும் என பபாசி தெரிவித்துள்ளது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை