தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:22 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் தகவலின்படி இன்று முதல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இன்று, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சென்னை, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 35 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments