"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

Mahendran
வியாழன், 13 நவம்பர் 2025 (11:37 IST)
தி.மு.க. கூட்டணி குறித்து பேசிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டினாலும், "கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்துவிட முடியாது" என்று அழுத்தமாக தெரிவித்தது, கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: காங்கிரஸ் அல்லாத முதல்வர்களில், மு.க. ஸ்டாலின் மட்டுமே கொள்கை உறுதியுடன் சிறப்பாக செயல்படுகிறார். அவர் நினைத்திருந்தால் பா.ஜ.க.வுடன் நட்பு பாராட்டி இருக்கலாம். ஆனால், அவர் அதை தவிர்த்துவிட்டு, ராகுல் காந்திக்கு துணையாக நிற்கிறார்.
 
அதே நேரத்தில்  நாம் கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். தமிழக ஆட்சியில் பங்குபெற வேண்டும். எனது இந்தக் கருத்து கூட்டணிக்கு எதிரானதல்ல.
 
முதலமைச்சர் ஸ்டாலின் மிகச் சிறப்பானவர். அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்துவிட முடியாது. இந்தக் கூட்டணியை தான் விரும்புவதாகவும், அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதேபோல் காங்கிரஸும் வளர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments