நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (19:12 IST)
நெல்லை பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் இருந்த நிலையில், அந்த பணத்தை ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி எடுத்துச் சென்று உரியவரிடம் ஒப்படைத்ததாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம், புதிய பஸ் நிலையத்தில், மாடசாமி என்ற காவல்துறை அதிகாரி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் கட்டு கட்டாக பணமும், கணினியும் இருந்ததை பார்த்தார்.
 
இதுகுறித்து அவர் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணம் பேச்சிமுத்து என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் அந்த பணமும் கணினியும் ஒப்படைக்கப்பட்டது.
 
நேர்மையான முறையில் பணத்தை  ஒப்படைத்த சிறப்பு எஸ்.ஐ. மாடசாமிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், அவரை காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டியுள்ளார்கள்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments