தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (13:17 IST)
தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதியை மையமாக கொண்டு 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் கோவையை தலைமை இடமாகக் கொண்டு கொங்கு மாநிலம் பிரிக்க வேண்டும் என்றும் குரல் எழுந்து வரும் நிலையில், அர்ஜுன் சம்பத் தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும் கொங்கு பகுதி, தென்தமிழகம் மற்றும் மீதமுள்ள பகுதி என மூன்றாக பிரிக்க வேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஐயப்பன் குறித்த சர்ச்சைக்குரிய பாடலை பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பா ரஞ்சி அவர்தான் மதங்களுக்கு இடையே, ஜாதிகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார் என்றும் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அர்ஜுன் சம்பத்தின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments