ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் ஆவலில் பலரும் ஏற்கனவே டிக்கெட்டை முன்பதிவு செய்து பார்த்து ரசித்தனர்.
அதேபோல், முதல் நாள் முதல் காட்சி பார்க்க விரும்பிய பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. இந்த படத்தின் டிக்கெட் ஏற்கனவே இன்னும் சில நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில், படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் கபாலி படத்தை பார்க்க தனக்கு விடுமுறை கிடைக்கவில்லை நடிகை பிரியா ஆனந்த் தனது டிவிட்டரில் அழுது வடிந்துள்ளார்.