ஆவின் பால் பாக்கெட் விலை திடீர் உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (09:43 IST)
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் குறிப்பிட்ட பால் பாக்கெட்டுகளின் விலை உயர்வை சந்தித்துள்ளது.



பொதுத்துறை நிறுவனமான ஆவின் பல்வேறு நிற பாக்கெட்டுகளில் டோண்ட் பால் பாக்கெட்டுகளை வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்து வருகிறது. கால் லிட்டர் தொடங்கி அரை லிட்டர், ஒரு லிட்டர், 5 லிட்டர் என பல அளவுகளில் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

இதில் 5 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெரும்பாலும் டீக்கடைகளால் வாங்கப்படுகின்றன. நேற்று வரை 5 லிட்டர் எடைக்கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் ரூ.210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.10 உயர்ந்து ரூ.220 ஆக விற்பனையாகி வருகிறது.

இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கும், தேநீர் கடை உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது டீ, காபி விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments