Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவ‌ன் து‌ன்புறு‌த்துவதாக முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்

கணவ‌ன் து‌ன்புறு‌த்துவதாக முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்
, வெள்ளி, 14 செப்டம்பர் 2012 (11:46 IST)
கணவ‌ன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக முன்னாள் உலக அழகி யுக்தா முகி போலீசில் புகார் செய்து‌ள்ளது ‌பா‌லிவு‌ட் சி‌னிமா உல‌கி‌ல் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

1999ஆம் ஆண்டு தனது 20 வது வயதில் உலக அழகி பட்டத்தை வெ‌ன்றவ‌ர் உலக அழகி யுக்தா முகி. பெற்றார். பல்வேறு இந்தி படங்களில் நடித்து‌ள்ள யுக்தா முகிக்கும், அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் பிரின்ஸ் டுலிக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு கன்வால் முகி என்ற குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், தனது கணவர் மீது மும்பை போலீசில் யுக்தா முகி புகார் செய்து உள்ளார். புகாரில், கணவர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் அவரது கணவர் மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதால், எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் கோர்ட்டு அனுமதி அல்லது உத்தரவின்றி போலீசார் செய்ய முடியாது.

இது குறித்து காவ‌ல்துறை அ‌திகா‌ரி ஒருவர் கூறுகையில், யுக்தா முகி கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது கணவர் மீது புகார் கொடுத்தார். இந்த வழக்கில் தண்டனைக்குரிய நடவடிக்கைக்காக அவர் ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுகலாம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil