Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

Advertiesment
Goa Fire

Siva

, ஞாயிறு, 7 டிசம்பர் 2025 (11:05 IST)
வடக்கு கோவாவின் ஆர்போரா கிராமத்தில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். சிலிண்டர் வெடிப்பே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
உயிரிழந்தவர்களில் 14 பேர் விடுதியின் ஊழியர்கள் மற்றும் நான்கு பேர் சுற்றுலா பயணிகள் என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். விடுதியில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக விடுதியின் உரிமையாளர் மற்றும் பொது மேலாளர் மீது கொலைக்கு நிகரான குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!