Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்டில் கனமழை : 9 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (17:02 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையில் இதுவைரை 9 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


 

 
உத்தரகாண்டில் நேற்று மழை பெய்ய தொடங்கியது. 2வது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேரும், சாலை விபத்தில் 6 பேரும் சிக்கி மொத்தம் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
அங்கு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கங்கை நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பத்ரிநாத் யாத்திரை செல்லும் சாலையில் பாறைகள் சரிந்து உள்ளது. 
 
அங்கே பெய்து வரும் கன மழையால் பத்ரிநாத், கங்கோத்ரி செல்லும் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதைகள் மூடப்பட்டுள்ளன. ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையும் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.
 
நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில், மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,  உத்தரகாண்டில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் மோசடி.. தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணையா?

நாளை விசாரணைக்கு வர முடியாது.. முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்: சீமான்

கழுத்தை அறுத்தாலும் பாஜகவில் இணைய மாட்டேன்: மம்தா பானர்ஜி உறவினர் பேட்டி..!

திமுக அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் புறக்கணிப்பு.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments