சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை..!

Mahendran
வியாழன், 25 செப்டம்பர் 2025 (11:17 IST)
சிபிஎஸ்இ  2026-ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 17 அன்று தொடங்கி, ஏப்ரல் 9 வரை நடைபெறும்.
 
10-ஆம் வகுப்பு தேர்வுகள்: பிப்ரவரி 17-இல் தொடங்கி மார்ச் 9 அன்று முடிவடையும். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறும். 12-ஆம் வகுப்பு தேர்வுகள்: பிப்ரவரி 17-இல் தொடங்கி ஏப்ரல் 9 அன்று முடிவடையும்.
 
10-ஆம் வகுப்பு:  பிப்ரவரி 17 முதல் ஒவ்வொரு நாளும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும். 
 
12-ஆம் வகுப்பு: பிப்ரவரி 17 அன்று தொடங்கும் தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும். 
 
இந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த அட்டவணை தற்காலிகமானது என்றும், இறுதி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments