Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் உலகின் அரிதான வகை ஆமை இறந்தது

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (20:17 IST)
உலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது.
இந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது.
 
இந்த வகை ஆமையை பெருக்குவதற்காக செயற்கையாக விந்தணுவை, அந்த 90 வயது ஆமைக்கு செலுத்தி இந்த வகை ஆமை இனத்தை பெருக்க ஐந்து முறை முயற்சி செய்தனர். ஆனால், பலனளிக்கவில்லை.
 
வேட்டையாடுதல், அதன் வாழ்விடத்தை அழித்தல் மற்றும் வரன்முறையற்று மீன் பிடித்தல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த ஆமையினம் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது.
 
இன்னும் ஓர் ஆண் ஆமை மட்டும் சீன வனவிலங்கு பூங்காவிலும், மீதம் உள்ள இரு ஆமைகள் வியட்நாம் காடுகளிலும் உள்ளன.
 
செயற்கையாக விந்தணுவை செலுத்தியதுதான் இந்த வகை ஆமையினம் பலி ஆனதற்கு காரணமா என்ற கேள்விக்கு, வன விலங்கு பூங்கா ஊழியர்கள், " விந்தணு செலுத்தப்பட்ட பின்பும் அது ஆரோக்கியமாகதான் இருந்தது. ஆனால், அடுத்த நாள் உடல்நலக் குறைவால் இறந்துள்ளது" என்றார்.
 
அந்த ஆமை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ரேக் அப் செய்த காதலி! கடத்திச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய முன்னாள் காதலன்!

திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் 40 அடி உயரத்தில் வேல்.. பக்தர்கள் பரவசம்..!

இன்று முதல் முதல்வர் மருந்தகங்கள்.. 1000 இடங்களில் திறந்து வைக்கும் விழா..!

ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments